பக்கங்கள்

15 ஜூன் 2011

தமிழ் வாகன ஓட்டுனரை தாக்கிய சிங்களப்படைகள்.

சிங்கள சாரதிகும் தமிழ் சாரதிக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக சிங்கள சாரதியுடன் இணைந்து இராணுவத்தினர் தமிழ் சாரதியை தாக்கியதில் தமிழ் சாரதியொருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் சென்றுக்கொண்டிருந்த பேரூந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சிங்கள சாரதி ஒருவர் சாவகச்சேரியில் யாழ் நோக்கி செல்வதற்காக காத்திருந்த பயணியொருவரை ஏற்ற முற்பட்ட போது பயணிகளை ஏற்ற வேண்டாம் என யாழ் கொடிகாம பேரூந்துச் சேவையில் ஈடுபடும் தமிழ் வாகனச் சாரதி கூறியுள்ளார். இதன் போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனை அவதானித்த இராணுவத்தினர் சிங்கள சாரதியுடன் இணைந்து தமிழ்ச் சாரதியை பொல்லுகள், இரும்புகளைக்கொண்டு தாக்கியுள்ளனர். குறிப்பிட்ட சாரதி உடல்,உள காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அதில் பயணித்த பயணிகள் இராணுவத்தினரின் பக்க சார்பான நிலையை எண்ணி மனம் வருந்திச் சென்றனர்.
யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடுபவர்கள் இடையில் மக்களை ஏற்றி உள்ளுர் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.