பக்கங்கள்

10 ஜூன் 2011

மாகியப்பிட்டியை சேர்ந்த பாடசாலை மாணவன் காணாமற் போயுள்ளார்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்ப் பகுதியில் பாடசாலைச் சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் காலைமுதல் காணாமற்போயுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் மாகியம்பிட்டியைச் சேர்ந்த 12 வயதுடைய பரமநாதன் ரஜிராம் என்ற சிறுவனே காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகியம்பிட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து சண்டிலிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலைக்கு நேற்று முன்தினம் காலை 7..30 மணியளவில் புறப்பட்டுச் சென்றபோது, குறித்த சிறுவன் காணாமற்போயுள்ளதாகவும் இதுவரை எந்தவித தகவலும் இல்லாதிருப்பதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.