பக்கங்கள்

25 ஜூன் 2011

வடபகுதியிலிருந்து பெண்களை எவருடனும் தனியே அனுப்ப வேண்டாம்.

வடபகுதிக்கு வந்து தொழில் பெற்றுத்தருவதாக கூறி, உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தொழில் பெற்றுத்தருவதாக கூறியும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறியும் வடபகுதியிலிருந்து யுவதிகளை கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே எக்காரணம் கொண்டும் தொழில் மற்றும் ஏனைய உறுதி மொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வட பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட யுவதிகள் சிலர் கொழும்பில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுவந்த நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விபரிக்கையிலேயே அதன் தலைவி இந்த கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பில் பெற்றோரும் பாதுகாவலர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும். இவ்வாறு தொழில் பெற்றுத்தருவதாகவும் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறியும் கொழும்புக்கு அழைத்து வந்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தெரியவந்துள்ளதால் இந்த விடயத்தில் பெற்றோரும் பெரியோரும் கவனமாக இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.