பக்கங்கள்

13 ஜூன் 2011

ஊர்காவற்றுறையில் உள்ள ஈ.பி.டி.பி.உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதம் மீட்பு.

யாழ். குடாநாட்டின் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அதற்குரிய ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். இராணுவ புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன.இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இன்று இரவு 8 மணியளவில் ஊர்காவற்றுறையிலுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனின் வீட்டினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.
இத்தேடுதலின்போது கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அதற்குரிய 60 தோட்டாக்கள் அடங்கிய இரண்டு மகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேடுதல் நடந்தவேளையில் குமரன் குறித்த விட்டில் இருக்கவில்லை எனவும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈ.பி.டி.பி. உறுப்பினர் குமரனை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை தற்சமயம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.