பக்கங்கள்

29 ஜூன் 2011

மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று அடையாள அணிவகுப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் கடந்த திங்கள் கிழமை 17 வயது டைய இரு பாடசாலை மாணவிகள் வீதியில் வைத்துகடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றதுஇது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த பெண்ணொருவரை கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான மாணவிகள் இருவரும் அடையாளம் காட்டினர்.
குறித்த மாணவியும் மற்றப் பெண்ணும் மட்டக்களப்பு நகருக்கு சென்று காத்தான்குடிக்கு திரும்பிய வேளை வீதியில் வைத்து ஆட்டோ ஒன்றில் சிலரால் 17 ம் திகதி கடத்தப்பட்டு வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னரே பள்ளிவாசல்கள் சம்மேளனத்திடம் அந் நபர்களினால் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும் இந்த சம்பவத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பார்க்கக் கூடாத படங்களை இவ் இருவரும் இணையத்தளங்களில் பார்வையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே அந் நபர்களினால் மாணவிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை கைதான பெண் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று வரை விளக்கமறியலில் அடையாள அணிவகுப்பிற்காக வைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக பொலிசார் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் பலவந்தமாக ஆட்டோவில் கடத்தி வீடொன்றில் தடுத்து வைத்து கைகளாலும் தும்புத்தடியினாலும் தடிகளினாலும் தாக்கி காயம் விளைவித்ததாகவும், அவமானப் படுத்தியதாகவும் குற்றவியல் கோவைச் சட்டத்தின் கீழ சந்தேக நபருக்கு எதிரான மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் குறித்த இருவராலும் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து ரூபா ஒரு லட்சம் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.அப்துல்லா எதிர்வரும் 8 ம் திகதி மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதே வேளை இச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண்னின் கணவன் உட்பட மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.