பக்கங்கள்

23 ஜூன் 2011

கனிமொழியின் உடலில் வீக்கம்,கொப்புளங்கள் கருணாநிதிக்கு புழுக்கம்.

ஜாமீன் மறுக்கப்பட்ட கனிமொழி டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை புதன் கிழமை சிறையில் சந்தித்துப் பேசிய கருணாநிதி இரவு சென்னை திரும்பினார். அவர் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசும் போது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோரைச் சந்திப்பதற்காக மட்டுமே தில்லி சென்றேன். மனிதத்தன்மையற்ற இடத்தில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவரது உடலில் வீக்கமும், வெப்பத்தால் கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளன. சரத்குமாரும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில்தான் கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அந்தத் தவறான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதை தனது கடமையாகக் கருதி சி.பி.ஐ. செயல்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் முதல்வராக இருந்தாலும் அதுதொடர்பான விசாரணை வரம்புக்கு உட்படுத்த சட்டம் கொண்டுவந்துள்ளோம். லோக்பால் சட்ட மசோதா விவகாரத்திலும் எங்களது நிலைப்பாடு அதுதான். ஊழலுக்கு எதிரான நல்ல முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். ஆனால், உள்நோக்கத்துடன் நடக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க முடியாது. தி.மு.க., காங்கிரஸ் உறவில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.