பக்கங்கள்

17 ஜூன் 2011

கொலை,கொள்ளை,பாலியல் வல்லுறவு இவற்றையும் மகாவம்சத்தில் இணைத்தால் நல்லது.

கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், அடிதடி, அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளும், இலங்கையின் புனித பௌத்த நூலான மகாவம்சத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கொடி விவகாரத்தில் நேற்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சரத்பொன்சேக பின்னர், சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், இலங்கை நாடானது பல உன்னதமான கலாச்சார பண்புகளை கொண்டிருப்பதாக பௌத்தமத நிகழ்வுகளில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய உன்னதமான கலாச்சார பண்புகளில், இலங்கையில் தற்போது நிலவும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், அடிதடி, அரசியல் பழிவாங்கல் பண்புகளையும், மகாவம்சத்தில் உள்ளடக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
இதேவேளை நேற்று நடைபெற்ற பொன்சேகவின் வெள்ளைக்கொடி வழக்கின் போது தாரூஸ்மன்(நிபுணர் குழு அறிக்கையை சிங்களம் இப்படித்தான் சொல்கிறது)அறிக்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக சண்டே லீடர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி தொடர்பாக எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என ஐ.நா மனித உரிமைகள், இருதரப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான வெளிவிவகார் ஆமைச்சின் பணிப்பாளர் நாயகம் சி.எச்.எம் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.