பக்கங்கள்

20 ஜூன் 2011

தமக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிராக தொடரப்படும் வன்முறைகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் பெண்களின் உரிமைகளை மதிக்கக் கோரியும் பெண்களினால் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்பாட்டம் ஒன்று இன்று காலையில் நடாத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த ஆர்பாட்டம் நடாத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கறுத்தத் துணிகளினால் வாய்கள் கட்டப்பட்டு தங்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி கோசமிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.