பக்கங்கள்

19 ஜூலை 2012

நயினாதீவில் வைத்தியர்கள் இல்லாததனால் பிரசவ வலியில் தாயும் சிசுவும் பரிதாபமாக பலி!

நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் அதேவேளை அவசர சிகிச்சையினை அப்பகுதி மக்கள் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் இல்லாத காரணத்தினால் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு நயினாதீவினைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக பிரதேசவைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த வைத்திய சாலையில் வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் அங்கிருந்து வேலணைப் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் படி வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேலணை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகும் கடந்த 7 மாதகாலமாக செயலிழந்து காணப்பட்டதால் சிறிய படகு ஒன்றின் மூலம் வேலணை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட குறித்த பெண்ணின் நிலை மோசமாக இருந்ததன் காரணத்தினால் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன் குறித்த பெண்ணின் கருவில் இருந்த நிறைமாத சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.