பக்கங்கள்

29 ஜூலை 2012

இலங்கையின் ஆதரவு நாடுகள் நான்கு வெளியேற்றம்!

ஐக்கிய நாடுகள் சபை ஜெனீவா
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட பிரேரணையின்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நாடுகளுள் நான்கு நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் வழங்கப்படுகின்ற இந்த உறுப்புரிமை, குறித்த நாடுகளிடம் இருந்து மீளப்பெறப்பட்டு மேலும் நான்கு நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன. இதன்படி, இலங்கைக்கு பெரிதும் ஆதரவை வெளியிட்டு வந்த சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்த மாநாட்டில் வாக்களிக்க முடியாது அதேபோன்று சவுதி அரேபியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளும் உறுப்புரிமையை இழந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.