பக்கங்கள்

20 மார்ச் 2012

ஜெனீவா மாநாட்டில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு ஜெனீவா சென்றுள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மனித உரிமை பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டுள்ள உருகுவே நாட்டு பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்கள பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.