பக்கங்கள்

11 மார்ச் 2012

சம்பந்தனுக்கு வந்த வெட்கம்!


புலம்பெயர் தமிழர்களை சிலர் இலங்கைக்கு எதிரானவர்கள் என குற்றம் சுமத்தினாலும் அவர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்கி, புலம்பெயர் தமிழர்களை வெற்றிக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் பல அரசியல் கட்சிகளை இரண்டாக உடைத்துள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகள் பௌத்த ஆலயங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெட்கமடைவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.