பக்கங்கள்

16 மார்ச் 2012

அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென பிரிட்டனின் தென் ஆசியவிற்கான அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
நிலையான சமாதானத்தையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி மனித உரிமை பேரவை அமர்வுகளில் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.செனல் 4 வின் இரண்டாவது காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் அலிஸ்டயர் பர்ட் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.