பக்கங்கள்

23 மார்ச் 2012

தீர்மானம் தொடர்பில் கிலாரி அறிக்கை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
27 வருட கால உள்நாட்டு யுத்தத்தைத் தொடர்ந்து நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் இலங்கை அரசு தொடர்ந்து முன்னேற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இன்றைய நடவடிக்கை ஊக்குவிக்கும். இலங்கை மட்டுமே உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல்கள் ஊடாக நீடித்த அமைதியை அடைய முடியும் என்கிற தெளிவான, உறுதியான சமிக்ஞையை சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து அமெரிக்கா வெளிப்படுத்துகிறது.
நீடித்த அமைதியை இலங்கை அடைவதற்கு உதவவும் சர்வதேச சமூகம் தயாராக இருக்கிறது. அடுத்த நடவடிக்கைகள் தெளிவானவை. நல்லிணக்க ஆணைக்குழுவின் காத்திரமான பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துகிறதா என்பதையும் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதையும் நாம் கவனிப்போம்.
இந்த இலக்கை இலங்கை அரசு அடைவதற்கு அதனுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தன்னை அர்ப்பணிக்கும். அத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடனான கலந்துரையாடல்களை நாம் எதிர்பார்த்திருக் கின்றோம்.
விழுமியங்கள், மதிப்பு மற்றும் காத்திரமான உரையாடல்கள் என்பவற்றின் அடிப்படை இலங்கை அரசுடன் நாம் கொண்டு இருக்கும் உறவுகளை மேலும் பயனுள்ள வகையில் தொடர்வோம். அனைத்திலும் முக்கியமாக இலங்கை மக்கள் அனைவருடனானதுமான உறவுகளை பலப்படுத்தவும் வேண்டிநிற்கின்றோம் என்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.