பக்கங்கள்

24 மார்ச் 2012

தமிழினத் தலைவர்கள் கைது!

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்திக்க பேரணியாக செல்ல முயன்றதாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பாளையங்கோட்டையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பேரணியாக இடிந்தகரை நோக்கிச் செல்ல முயற்சித்தனர். ஆனால் பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பாளையங்கோட்டை, கூடங்குளம் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.