பக்கங்கள்

20 மார்ச் 2012

கொழும்பில் பிக்குகள் இருவர் படுகொலை!

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றைச் சேர்ந்த பிக்குகள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று இரவு 9.45 மணியளவில் இச்சம்பவம் கொழும்பு கோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பிக்கப் ரக வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுதக் குழுவினரே பிக்குகள் இருவர் மீதும் தாக்குதல் நடத்திக் கொலைசெய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட இருவரும் கூரிய ஆயுதமொன்றால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதுதொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.