பக்கங்கள்

17 மார்ச் 2012

கர்நாடகாவில் நடைபெறும் பொங்குதமிழில் ராதிகா.

கருநாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள "பொங்கு தமிழ்" மாநாட்டுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இது தமக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத் தமிழர்களை இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்துமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
"பொங்கு தமிழ்" நிகழ்வு நடைபெறும் திகதி பற்றிய விபரங்கள் விரைவில் அறித்தரப்படும் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கருநாடகா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்துகின்ற �பொங்கு தமிழ் 2012″ சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என கொளத்தூர் மணி (பெரியார் திராவிட கழகம்) அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகத்தமிழினத்தின் ஒற்றுமையை மனதில் கொண்டு, அந்த உயர்ந்த நோக்கத்திற்காக இந்தியாவின் எழில் நகராம் பெங்களூரில் அருமை நண்பன் கணேசன் அவர்களின் பெருமுயற்சியில் "பொங்குதமிழ் 2012″ நிகழ்வு நடைபெறுவது எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும் விடயம் என திருச்சி வேலுச்சாமி (மூத்த காங்கிரஸ் தலைவர்) அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போதைய காலத்தின் தேவையாக தமிழ் மக்களுக்கு இந்த "கருநாடகா பொங்கு தமிழ்" மாநாடு அமையும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் திரு. வேல்முருகன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருநாடகத்தில் வாழும் 80 லட்சம் தமிழர்களின் சார்பாக கருநாடக தமிழர்களின் குரல் பொறுப்பாளர் கு.கணேசன் அவர்கள் "பொங்குதமிழ் 2012″ நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக எம்மை அழைத்தமையையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன். நிச்சயமாக இந்நிகழ்வில் நான் கலந்துகொள்வேன் என செல்வி ராதிகா சிற்சபை ஈசன் (கனடா நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.