பக்கங்கள்

26 மார்ச் 2012

தனி ஈழம் பற்றி பேசுவது ஆபத்தென்கிறார் சுமந்திரன்!

உலகத்திற்கு தகவல் வழங்கும்போது தமிழ்நாடு அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சில சமயங்களில் சில கருத்துக்கள் சர்வதேசத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட “தனி ஈழம்தான் எனது கனவு” என்ற கருத்து குறித்து சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது,
“அரசியல்வாதிகள் நல்ல நோக்கத்தை உண்மையில் நிதானத்துடன் வெளியிட வேண்டும். இல்லையேல் தமிழர்கள் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும்” உலகத்திற்கு தகவல் வழங்கும்போது தமிழ்நாடு அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சில சமயங்களில் சில கருத்துக்கள் சர்வதேசத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். என பதிலளித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் தீர்மானம் இலங்கைக்கு முன்னோக்கி செல்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு மற்றும் பிடிவாதம் என்பவை சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளை கட்டாயமாக்கிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பொறுப்புக் கூறலில் இருந்து விலகிச் சென்ற போதும் சில விடயங்களில் சரியாகச் செயற்பட்டுள்ளதென சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுப்புக்கூறுவதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விலகினாலும் மறுபுறம் மனித உரிமை கவுன்ஸில் பொறுப்புக்கூறல் குறித்து தனித்தனியே பேசுவதாக அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.