பக்கங்கள்

19 மார்ச் 2012

உதைபந்தாட்டப் போட்டியை நிறுத்தியது சிங்களப்படை!

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெறவிருந்த உதைபந்தாட்டப் போட்டி இராணுவத்தினரின் தலையீட்டால் நடைபெறவில்லை.
யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையேயான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி யாழ். மாநகரசபையின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வந்த இராணுவத்தினர் அங்கு விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், மோதும் அணிகள் மற்றும் பார்வையாளர்கள் வந்திருந்த நிலையில் மைதானத்திலிருந்த கோல் கம்பங்களை அகற்றியதுடன் தாங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் கண்காட்சிக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி அனைவரையும் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர் என்று யாழ். உதைபந்தாட்ட லீக்கின் முக்கிய பதவிகளில் உள்ள உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பல நாள்களாக நடைபெற்று வந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.