பக்கங்கள்

21 மார்ச் 2012

யாழில் சேரன் படை எனும் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டிகள்!


எவராவது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்ற பட்சத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மிரட்டுகின்ற துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் நேற்று ஒட்டப்பட்டு இருக்கின்றன.
சேரன் படை என்கிற குழுவே இத்துண்டுப் பிரசுர அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் கலாசார விழுமியங்களை பின்பற்றி நடக்க வேண்டும், பெண்கள் பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும் என்பதோடு உடலை வெளியில் காட்டுகின்றபடியான உடுப்புக்களை அணிகின்றமை கூடாது, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் இத்துண்டுப் பிரசுரங்களில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.