பக்கங்கள்

12 அக்டோபர் 2010

யாழ்ப்பாணப் பெண் சென்னையில் கைது!

சட்ட விரோத புகலிட தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 28 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாமினி என இனங்காணப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இவர் புழல் சிறையில் வைக்கப்பட்ட பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 30 வருட காலம் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே போன்ற நாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கை மார்க்கமாகச் செல்வதிலும் சிரமம் உள்ளதால் அநேகமானவர்கள் இந்தியாவிலிருந்து மேற்படி நாடுகளுக்குச் செல்கின்றனர். கியூ பிரிவு பொலிஸார் கைதான பெண் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.