பக்கங்கள்

18 ஜூன் 2012

அவுஸ்ரேலியா புறப்பட இருந்த படகை தடுக்க சென்ற பொலிசாரும் படகில் ஏறி தப்பினரா?

படகில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களைக் கடத்தும் முயற்சியொன்றை முற்றுகையிட சென்ற பொலிஸ் சிப்பாய் இருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர்களாவர். சிலாபம், கருக்குபனை பிரதேசத்தில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது. இந்த முற்றுகையின் பின்னர் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களும் பணிக்குத் திரும்பவில்லை எனவும்,எதனால் இவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆட்கடத்தல்காரர்கள் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களுக்கும் அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தியிருக்கலாம் என ஒரு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், ஆட்கடத்தல் காரர்களுடன் இந்த இரண்டு பொலிஸ் சிப்பாய்களும் படகில் அவுஸ்திரேலியா சென்றிருக்கலாம் என இன்னுமொரு தரப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.