பக்கங்கள்

06 டிசம்பர் 2018

இரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள்!

மன்னார்- மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று 112 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற போது, இரண்டு கால்களும் இரும்பு கம்பியுடன் இறுக்கக் கட்டப்பட்ட நிலையில், இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது. சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடய பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.