பக்கங்கள்

01 நவம்பர் 2018

வடக்கு கிழக்கு இணைப்பு,சமஷ்டி நான் இருக்கும்வரை சாத்தியம் இல்லை -மைத்திரி!


ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால், தாம் உடனடியாகப் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால், தாம் உடனடியாகப் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மைத்திரிபால சிறிசேன நேற்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். ''நான் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பும் சமஷ்டியும் சாத்தியமில்லை. அதை அடைய வேண்டும் எனில் அவர்கள் என்னை கொலை செய்ய வேண்டும்.ஆனால் சமஷ்டி தொடர்பிலும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் சிலர் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சிறந்த புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இருவரும் விவாதித்துள்ளோம். எனவே எதிர்காலம் குறித்து அச்சம் தேவையில்லை” என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.