பக்கங்கள்

08 ஜூன் 2018

ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி!


கனடா- ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக  ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.  ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத்துக்கு நேற்று தேர்தலில், இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க்  தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார்.
கனடா- ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத்துக்கான நேற்றைய தேர்தலில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு, 16,224 வாக்குகள் கிடைத்துள்ளன. தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பெலிசியா சாமுவெல், 15,261 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம். 963 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார். லிபரல் கட்சி வேட்பாளர் சுமி சான் 8785 வாக்குகளையும், பசுமைக் கட்சியின் வேட்பாளர் பிரியன் டி சில்வா 1014 வாக்குகளையும், பெற்றுள்ளனர். இதற்கிடையே இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஒன்ராரியோ சட்டமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்வர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது. தேசிய ஜனநாயக கட்சி 39 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாமிடத்திலும், லிபரல் கட்சி 7 ஆசனங்களுடன் மூன்றாமிடத்திலும், பசுமைக் கட்சி 1 ஆசனத்துடன் நான்காமிடத்திலும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.