பக்கங்கள்

08 ஜூலை 2018

எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரன்-விஜயகலா!


எத்தகைய தடைகள் வந்தாலும், எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரனை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எத்தகைய தடைகள் வந்தாலும், எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரனை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று உரையாற்றியதால் பதவியிழந்த விஜயகலா மகேஸ்வரன் , ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். “எனது மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அப்படி செய்ய முடியாமல் போனால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதங்களை மீற வேண்டிய நிலை ஏற்படும். எனது மனதில் உள்ள வேதனையை கூற எனக்கு உரிமை உள்ளது. ஊடகங்கள் ஊடாக தான் அந்த பிரச்சினை வெளியே வருகின்றது.எனினும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஊடகத்திற்கு முன்னால் இந்தப் பிரச்சனையை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. இந்த விடயம் தொடர்பில் நட்புறவுடனேயே நான் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்தேன். எனினும் ரஞ்சன் ஸ்பீக்கரில் போட்டு ஊடகத்திற்கு முன்னால் வெளிப்படுத்தினார் என்று அதுவரை எனக்கு தெரியாது. இது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உள்ள உரிமை மீறலாகும். அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார். பெண் இனத்திற்கு துரோகம் செய் துவிட்டார். ஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது. அவர் அந்தளவு கொடூரமானவர் இல்லை. நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ அவர் எம் இனத்திற்காக போராடினார் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அவர் இருந்த காலத்தில் எங்களுக்காக போராடிய தலைவராகும். அவர் வரலாற்றை எதிர்வரும் பரம்பரை ஆய்வு செய்யும். தெற்கில் ஹிட்லர் ஆட்சியே இடம்பெறுகின்றது. வடக்கில் எம்மை வாக்குகளுக்காக மாத்திரமே வைத்துள்ளனர். எனினும் ஹிட்லரையும் பிரபாகரனையும் தராசில் வைக்க முடியாது. அவர் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றே போரிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.