பக்கங்கள்

14 நவம்பர் 2018

நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்!

Related imageபுதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதாகவும், இன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அதன்படி பிரேரணைக்கு ஆதரவாக கிடைத்த பெரும்பான்மை வாக்குகளுக்கமைய பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் என்பன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.