பக்கங்கள்

28 பிப்ரவரி 2018

ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்!

Bildergebnis für ஜெயேந்திரர்சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் நடை அவசரஅவசரமாக சாத்தப்பட்டது.காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜெயேந்திரரின் மறைவை அடுத்த சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து வீதி உலா சென்றிருந்த காமாட்சியம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு கோவில் நடைசாத்தப்பட்டது.வழக்கமாக 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இன்று ஜெயேந்திரர் மரணத்தை முன்னிட்டு கோவில் நடை முன்கூட்டியே சாத்தப்பட்டுள்ளது.அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட ஜெயேந்திரர் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கிலும் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.