பக்கங்கள்

10 பிப்ரவரி 2018

கொள்கை வென்றது!புளியங்கூடலில் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றி!

இன்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உந்து உருளி(சைக்கிள்)சின்னத்தில் போட்டியிட்ட கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றியீட்டியுள்ளார்.அவரது வெற்றிக்காக பாடுபட்ட அனைவரும் பெரும் மகிழ்வில் திளைத்துள்ளனர்.புளியங்கூடல் மண் விழாக்கோலம் பூண்டுள்ளது,வெடிச்சத்தங்கள் முழங்க இளைஞர்கள் பவனி வந்துகொண்டு இருக்கின்றார்கள்.ஞானேஸ்வரனின் வெற்றியானது அவரதும் அவர் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸினதும் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.சமூக சேவையாளரான ஞானேஸ்வரன் தான் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம் தனது கடமையை சரிவர ஆற்றுவார் என்ற நம்பிக்கை அவரது தொகுதி மக்களிடையே மிகுந்து காணப்படுகின்றது.பண பலம் இல்லை கொள்கையே முக்கியம் தன்மானமே முக்கியம் என்பதை புளியங்கூடல் மக்கள் தமது வாக்குகளால் அடித்து சொல்லியிருக்கிறார்கள்.இந்த தருணத்தில் புளியங்கூடல் மக்களுக்கு புளியங்கூடல்.கொம் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.அங்கிருந்து உடனுக்குடன் செய்திகளை வழங்கிய செய்தியாளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தனிப்பட்ட ரீதியில் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டவர்களுக்கும் நன்றிகள்.உந்து ஊர்தியில்(சைக்கிள்)கேட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.உரிமைக்கான போராட்டம் தொடரும் மக்கள் சக்தியோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.