பக்கங்கள்

25 பிப்ரவரி 2018

சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக தமிழ் மக்கள் போராட்டம்!

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயங்கமாக அடையாளப்படுத்தி, அந்த இயக்கத்திற்காக உழைத்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து காவல்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து தொடர்ந்துள்ள வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சுவிட்ஸ்லாந்தின் பேர்ன் நகரில் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது சுவிட்ஸர்லாந்து உட்பட ஐரோப்பிய வாழ் ஏராளமான புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.