பக்கங்கள்

02 பிப்ரவரி 2018

பிடல் காஷ்ரோவின் மகன் தற்கொலை!

கியூபா புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோவின் மூத்த மகன் பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியாஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டார். கடந்த பல மாதங்களாக மன அழுத்த சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை (வெள்ளிக்கிழமை), கியூபாவில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 68. அண்மையில்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடு திரும்பியபோதும் அவர் தொடர் சிகிச்சையிலேயே இருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்கு அவரது குடும்பத்தினரால் முடிவு செய்யப்படும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலும் இல்லை என்றும் உள்நாட்டு ஊடங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.