பக்கங்கள்

01 ஜனவரி 2018

முதலமைச்சரை விமர்சிப்பது கூட்டமைப்பின் அந்தரநிலையை காட்டுகிறது-கஜேந்திரகுமார்!

Bildergebnis für கஜேந்திரகுமார் பொன்னம்பலம்பத­விக்­கா­கவே வடக்கு முத­ல­மைச்­சர் தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்பின் தலை­மையை விமர்­சிக்­கின்­றார் என்று கூறி­னால் அதை சிறுபிள்ளை கூட ஏற்­காது என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்னணியின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய மக்­கள் பேர­வை­யின் வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்­தும் நிகழ்வு நேற்று வட்­டுக்­கோட்­டை­யில் உள்ள பேரவையின் அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரிவித்தபோது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். தமிழ் தேசி­யக் கூட்டமைப்புக்கு விசு­வா­ச­மாக இருந்­தி­ருந்­தால் அடுத்த தலைமையாக அவர் இருந்­தி­ருப்­பார். முத­ல­மைச்­சர் சம்­பந்­தனை வீழ்த்தி தலை­மைப் பத­வியை பெற­வேண்­டும் என நினைக்கவில்லை.சம்­பந்­தன் மீது ஒரு­வித நன்­றிக்­க­டன் இருப்பதால்தான் இப்­போ­தும் ஒரு நிலைப்­பாட்­டுக்கு வராது இன்­றும் அமை­தி­யாக இருக்­கின்­றார். தமிழ் மக்­களை சுமத்­தி­ரன் மட்­டும் அழிக்­க­வில்லை, சம்­பந்­தனும் சேர்ந்து அழித்­துக் கொண்டிருக்கின்றார்.முத­ல­மைச்­சர் ஒரு பக்­கத்­தில் எழு­திய அறிக்கைக்கு பத்து பக்­கத்­தில் தமி­ழ­ர­சுக் கட்சி பதிலை வழங்கியுள்ளது என்­றால் அவர்­கள் எந்­த­ள­வுக்கு அந்­த­ரத்­தில் உள்ளனர் என விளங்­கு கின்­றது.தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இடைக்­கால அறிக்­கை­யில் உள்ள விட­யங்­களை வீடு வீடாக சென்று மக்­கள் மத்­தி­யில் பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு குழப்பப் போகின்­ற­னர். தமிழ் மக்­கள் இந்த விட­யத்­தில் தெளிவடைய வேண்­டும். அபி­வி­ருத்தி என்ற பெய­ரில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இந்த தேர்­த­லில் வெற்­றி­யீட்­டி­னால் சர்­வ­தேச மட்டத்தில் தமிழ் மக்­கள் தமக்கு ஆத­ரவு உள்­ளது என்று வெளிக்காட்டி அர­ச­மைப்பை நிறை­வேற்ற உத்­தே­சிக்­கின்­ற­னர் என்பதையும் கஜேந்திரகுமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.