பக்கங்கள்

13 ஜனவரி 2018

யாழில் மண்பானை விற்பனை இம்முறை அதிகரிக்கும் என நம்பிக்கை!

யாழ்ப்பாணம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் தைப்பொங்கல் பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மண்பானைகளின் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.மண்பானைகளில் சிறிய பானையொன்று 150 ரூபாவாகவும், அதற்கு அடுத்துள்ள தரத்திலான பானைகள் 500 ரூபா, 550 ரூபா, 600 ரூபா ஆகிய பல்வேறு விலைகளிலும் விற்பனையாகின்றன. கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவிலான மண்பானைகள் விற்பனையாகுமென வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர் என செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.