பக்கங்கள்

29 டிசம்பர் 2017

மாணவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி!

உயர்தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமையினால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த மாணவரே விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன் தனது சக மாணவர்களை விடவும் குறைந்தளவு மதிப்பெண்களை பெற்றதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.மாலை வேளையில் மாணவனது அறையில் அழுகுரல் கேட்டதாகவும்,ஓடிச்சென்று பார்த்தபோது மாணவன் வாந்தி எடுப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகவும்,மாணவனது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.