பக்கங்கள்

21 ஜனவரி 2018

நாளை தபால் மூல வாக்களிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என்று தேர்தல் ஆணைய பணிப்பாளர் நாயகம் ஆர்.எல்.ஏ.எம். இரத்நாயக்க தெரிவித்துள்ளார். “நாளை, 22 ஆம் திகதி, காவல் நிலையங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்களில், தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும். ஏனைய அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ஆம், 26ஆம் நாள்களில் இடம்பெறும். இம்முறை சுமார் 560,000 அரச பணியாளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.