பக்கங்கள்

31 ஜனவரி 2018

கோயிலில் பிரச்சாரம் உந்து உருளிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஆலய குருக்கள்மாருக்கும் எதிராக வலிவடக்கு பிரேதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போது 20ஆம் வட்டாரம் மல்லாகம் பகுதிக்கான வேட்பாளருமான சோ.சுகிர்தன் அவர்களால் அரசியல்க் காழ்ப்புணர்ச்சியுடன் இந்து மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கு கௌரவ மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கில் சட்டத்தரணிகள் குருபரன், காண்டீபன், ஜெயரூபன், பார்த்தீபன், ஜோய் மகிழ் மகாதேவா, லலிதாஸ் சர்மா,சுபாஷ்கரன், றோய், கீர்த்தனா, தனுஜா, கஸ்தூரி,சுகாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்மோடு கூட இருந்து எம்மை வழிப்படுத்தும் எல்லாம் வல்ல இறைவனிற்கு நன்றிகள். எம்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டமையை கேள்வியுற்ற நொடிப்பொழுது முதல் நல்ல தீர்ப்பு வரும்வரை எமக்காக இறைவனைப் பிரார்த்தித்த நல்லுள்ளங்களிற்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பிலும்,தனிப்பட்ட முறையிலும் நன்றிகளைப் பகிர்கின்றேன். மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தில் தேர்தல் விதிமுறையினை மீறியவகையில் செயற்பட்டதாகக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிவடக்கு வேட்பாளர் சோ.சுகிர்தன் அவர்கள் பெலீசாரிடம் சமர்ப்பித்த புகைப்படங்களை இத்தால் வெளிப்படுத்துகின்றேன். ஆலய வழிபாட்டினை கொச்சைப்படுத்திய நயவஞ்சகர்களுக்கு சரியான பாடம் புகட்ட அணிதிரள்வோம். மாற்றத்திற்காய் வாக்குகளை வழங்கி எதிர்கால சந்ததி நிம்மதியாய் தலைநிமிர்ந்து வாழ வழிகாட்டுவோம்.இவ்வாறு தாயுமானவர் நிகேதனின் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் சாப்பிடுகின்றனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.