பக்கங்கள்

26 ஜனவரி 2018

உந்து உருளிப் பக்கம் மக்கள் பார்வை திரும்பியதால் பெரும் அச்சத்தில் பிற கட்சிகள்!

நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.இம்முறை மக்கள் பார்வை அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் உந்து உருளிப் பக்கம் திரும்பியுள்ளதால் பிற கட்சிகள் மிகவும் கலங்கிப்போய் இருக்கிறார்கள்.தமிழ் மக்களின் வாக்குகளில் பதவிக்கு வந்தவர்கள் சிங்கள அரசின் கைப்பொம்மையாக மாறியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இன்றைய காலகட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேவை மக்களால் நன்கு உணரப்பட்டிருக்கிறது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு மக்கள் மத்தியில் நாளாந்தம் அதிகரித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத பிற கட்சியினர் தோல்வி பயத்தில் இருப்பதோடு உந்து உருளி சின்னத்தில் போட்டியிடுபவர்களை எப்படி ஓரம் கட்டலாம் என பல வழிகளிலும் சிந்தித்து குழப்பத்தில் மூழ்கியிருப்பதாக அறிய முடிகிறது.தமக்கிருக்கும் அரச பலத்தை பயன் படுத்தி பொய்க்குற்றச் சாட்டுகளில் உந்து உருளி சின்ன வேட்பாளர்களை சிறைக்குள் தள்ளப்போவதாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.மக்களின் பலத்தை மட்டுமே நம்பி களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அம்மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை மக்கள் அவர்களுக்கு அளிக்கும் வரவேற்பின் மூலம் காண முடிகின்றது.இது வெறும் வீதி திருத்தத்திற்கான தேர்தல் இல்லை தமிழ் மக்களின் விதியை தீர்மானிக்கும் போர் என்பதை ஒவ்வொரு தன்மானத் தமிழனும் உணர்ந்திருக்கிறான் என்பது உண்மை.பேரமற்ற நேர்மையான அரசியலுக்கு உந்து உருளிக்கு வாக்களிப்போம்,உரிமைகளை வென்றெடுக்க ஓங்கிக் குரல் கொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.