பக்கங்கள்

27 ஜூலை 2013

பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவை கோத்தா சந்திக்க மறுப்பு!

கோத்தா படைகளுடன்
பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை கோத்தபாய ராஜபக்ச கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளார்.பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தற்போது சிறிலங்காவில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டுள்ளது.இந்தக் குழு வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்ட நிலையில்,நேற்று கொழும்பில் அரசதரப்புடனான சந்திப்புகளை மேற்கொண்டது.நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை சந்திக்கத் திட்டமிட்டிருந்த நிலையில்,பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை கோத்தாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளார்.முன்னதாக, சிறிலங்கா ஜனாதிபதியையும் இந்தக் குழு சந்திக்கத் திட்டமிட்டிருந்தது.ஆனால்,இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்,சைமன் டன்சுக்,சிறிலங்கா ஜனாதிபதியைச் சந்திக்கும் போது,பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலை தொடர்பாக கேள்வி எழுப்பப் போவதாக வெளியிட்ட கருத்து சிறிலங்காவுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.இதனால்,பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுக்கும்,மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிறுத்தியது.இந்தநிலையிலேயே கோத்தபாய ராஜபக்சவும்,பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவை சந்திக்காமல் தவிர்த்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.