பக்கங்கள்

28 ஜூலை 2013

இரவல் வாங்கிய நகையை கொடுக்க மறுத்தவர் கைது!

12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இரவலாக பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில்; ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இரவலாக பன்னிரெண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இரவலாக பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மானிப்பாய் சுதுமலையைச்சோந்த 30 வயதான ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 22ஆம் திகதி முறையிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் குறிப்பிட்ட சந்தேகநபரை அவரது விட்டில் வைத்து கைதுசெய்து யாழ்ப்பாணம் நிதிமன்றில் ஆயர்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்வரும்; 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது என பொலிஸ் அத்தியட்சகர் எக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.