பக்கங்கள்

29 ஜூலை 2013

சாகும்வரை உண்­ணா­வி­ரதம் - செல்வம் அடைக்­க­ல­நாதன்

செல்வம் 
தமிழ் மக்­க­ளு­டைய தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­கா­விடில் சாகும் வரை உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­படப் போவ­தாக வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் தெரி­வித்­த­தா­வது, அர­சாங்­கத்­தினால் அடுத்த வரு­டத்­துக்குள் தீர்வு முன்­வைக்­கப்­ப­டா­விடின் சாகும் வரை உண்­ணா­வி­ரதப் போராட்­ட­மொன்றை மேற்­கொள்ளப் போவ­தாக கடந்த வருடம் நவம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தேன். 7 மாதங்கள் கடந்த நிலை­யிலும் அர­சினால் இன்னும் எந்த­வொரு தீர்வும் வழங்­கப்­ப­ட­வில்லை. அர­சுக்­கான கால அவ­காசம் இன்னும் நான்கு மாதங்­களே உள்­ளன. அதற்குள் தமிழ் மக்­க­ளு­டைய தேசிய பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாது போனால் நான் கூறி­ய­படி எதிர்­வரும் நவம்­பரில் இருந்து சாகும்­வரை உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­கின்றேன் என்றார். இதேவேளை, இதற்கு ஆதரவு வேண்டி ரெலோ அமைப்பினரால் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.