பக்கங்கள்

22 மே 2014

வயோதிபப் பெண் கொலை!

கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் தங்க நகையும் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்.அரியாலை இளையதம்பி வீதியிலுள்ள வீட்டிலேயே நேற்றுக் காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டினில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணான சோமசுந்தரம் இராசம்மா என்ற 72 வயதுடையவரே இவ்வாறு திருட்டுக்கு சென்றவர்களினால் கட்டி வைக்கப்பட்ட நிலையில் கழுத்து நெரியுண்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் மகள் வெளியில் சென்றிருந்த தருணம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்தவர்கள் தங்க நகைகளை திருடியதோடு வயோதிபப் பெண்ணின் காதினையும் அறுத்து தோட்டினை அபகரித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அயலவர்கள் யாழ்ப்பாணம் சிறீலங்கா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு வந்த பொலிசார்
சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.