பக்கங்கள்

04 மே 2014

இன்றைய அச்சுவேலி படுகொலை தொடர்பில் இருவர் கைது!

யாழ்.அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைதுசெய்யப்படுள்ளனர் என அச்சுவேலிப் பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி ஒன்றும் இரத்தக்கறைகளுடன் நவக்கிரிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள தர்மிகா என்பவரது கணவரான தனஞ்செயன் என்பவரும் மற்றுமொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இந்த பயங்கர சம்பவத்தில் ஒரே குடும்பத்கைந் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகிய மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.