பக்கங்கள்

18 மே 2014

இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் உயிருடன் கைதுசெய்த புதிய ஆதாரம்!

2009ம் ஆண்டிற்குப்பின் தொடர்ச்சியாக எமது உறவுகள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்ட பல ஆதாரங்களை பிரித்தானிய தமிழர் பேரவை.சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வந்த வண்ணம் உள்ளது , அவ்வாறான ஆதாரங்களை பல்வேறு பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தி அதன் நம்பகத் தன்மையை நிரூபித்த பின்னர் அவற்றை பெரும்பாலும் பிரித்தானியாவின் புகழ் பெற்ற ஊடகங்கள் உலகிற்கு வெளிக் கொண்டு வந்த வண்னம் உள்ளன. இவ்வாறான சாட்சிகளும் காட்சிப்பதிவுகளும் உலகின் மனச்சாட்சியை உலுப்ப ஆரம்பித்த பின்னனியில் இலங்கை மீது ஓர் சர்வதேச விசாரணையை ஆரம்பிப்பதற்கான அடித்தளம் இப்போது இடப்பட்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று , முள்ளிவாய்க்கால் அவலத்தின் 5ம் ஆண்டை நினைவு கூறும் தருணத்தில் , இறுதியுத்தத்தில் உயிருடன் பிடிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா, மற்றும் அவரது தோழி உட்பட பலர் உயிருடன் பிடிக்கப்பட்டு கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்கள் தமிழர் பேரவைக்கு கிடைத்திருக்கின்றதன. இவர்கள் இலங்கை இராணுவக் காவலரணுக்கு அருகாமையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படமும், இசைப்பிரியா தனிமையில் இருத்தப்பட்டு அவரைச்சுற்றிலும் பல இலங்கை இராணுவத்தினர் வேடிக்கை பார்க்கும் புகைப்படமும் , இவருடன் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படமும் கிடைக்கப்பட்டிருக்கின்றது. இக் கைதுகளில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முகங்கள் மிகத்தெளிவாக அடையாளம் காணக்கூடியதக உள்ளது, அதேவேளை இப் புகைப்படங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று சர்வதேச மட்டத்தில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான தருணத்தில் , தாயகத்தில் இழந்த உறவுகளை நினைவு கூறும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்ட நிலையில் எமது உறவுகள் வாழ்கின்றனர். எனவே இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்று உலகளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இங்கே லண்டனில் Trafalgar Square ல் இன்று பிற்பகல் 4 மணிக்கு நீதி கேட்டு ஓர் கவண ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணிகள் , போராட்டங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் அலை அலையாக கலந்து கொண்டமைதான் பிரித்தானிய பிரதமரை யாழ்ப்பானம் வரை கொண்டு சென்றது. மக்கள் சக்திக்கு அவ்வாறான ஒரு பலம் உண்டு என்பதை லன்டன் பேரணிகள் ஏலவே நிரூபித்துள்ளது இவ்வாறான பின்னனியில் இன்று நடைபெறும் கவண ஈர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.