பக்கங்கள்

29 ஜனவரி 2017

கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வாகனமொன்றில் ஆடு வாங்குவதற்காக அந்த பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்ற போது யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருந்ததாக விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் கடை ஒன்றை நடத்துவதுடன் மற்றயவர் புத்தளத்தில் இருந்து இவருடன் செயற்ப ட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.