பக்கங்கள்

06 பிப்ரவரி 2017

விபத்தில் வேலணையை சேர்ந்த புது மாப்பிள்ளை மரணம்!

யாழ்ப்பாணம் அராலிச்சந்தியில் இன்று முற்பகல் உழவு இயந்திரம் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் பலியானார், மனைவி படுகாயமடைந்தார். இந்த விபத்துச் சம்பவத்தில் வேலணைப் பகுதியைச் சேர்ந்த தவநாகேஸ்வரன் பிரதீபன் (வயது 29) என்ற குடும்பஸ்தரே பலியானார். படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த உழவு இயந்திரம் அராலிப் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளை மோதி 100 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் சென்று கடலேரிக்குள் இறங்கியிருந்தது. குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய கணவன் மனைவிக்கு ஆறு நாட்களுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.