பக்கங்கள்

09 ஜனவரி 2017

தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபி துப்பரவுப்பணி!

யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள பொலிஸாரின் இனவாதத்திற்குப் பலியான தமிழர்களின் நினைவுத் தூபி பகுதியினை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுடைய நினைவு தினம் நாளை செவ்வாக்கிழமை அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையிலே அவ் நினைவு தூபியினை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத் தூபியினை துப்பரவு செய்யும் பணிகளை வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தலமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.