பக்கங்கள்

06 ஜனவரி 2017

கனடாவில் கடும் குளிரில் இருந்து காப்பாற்றப்பட்ட தமிழ்ப் பாட்டி!

கனடா - ஒன்ராறியோ, மார்கம் பகுதியில் நேற்றுக்காலை 7.30 மணியளவில் தனிமையில் அலைந்து திரிந்த தமிழ் மூதாட்டி ஒருவரை கனடியப் பொலிஸார் மீட்டுள்ளனர். 80 வயது மதிக்கத்தக்க இவர் மீட்கப்பட்ட போது, வீட்டில் அணியும் பிறவுண் நிற கோர்ட் அணிந்திருந்தார். காலில் காலுறையோ பாதணியோ இருக்கவில்லை. அப்போது, வெப்பநிலை மைனஸ் 10 டிகிரியாக இருந்தது. அவரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு அந்நாட்டு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கோவான் வீதி டவுன்லி அவனியு மற்றும் ஹைகிளென் அவனியு பகுதியில் இருந்து குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் தரையில் வீழ்ந்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் பொலிஸார், அவரின் பெயர் புவனேஸ்வரி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.