பக்கங்கள்

25 ஜூன் 2013

பாடசாலைச் சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

கொக்குவிலில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலை ஒன்றில் 8 வயது மாணவியொருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக்கிளை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அதன் இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்தார். கொக்குவிலில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை கணிதபாட ஆசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வகுப்பறையில் பயிற்சிக்காக கணக்கு ஒன்றை தவறாகச் செய்த காரணத்தால் குறித்த ஆசிரியர் மாணவியின் இரண்டு கால்களிலும் பிரம்பால் அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கண்டல் காயம் காரணமாக குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் கிளை முன்னெடுத்துள்ளது என கனகராஜ் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.