பக்கங்கள்

22 ஜூன் 2013

ஜெர்மன் எசன் நகரில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு!

ஜெர்மன் எசன் அல்றண்டோர்ப் பகுதியில் உள்ள தமிழர் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் எமக்கு தகவல் தருகையில்,சென்ற  ஞாயிற்றுக்கிழமை(16.06.2013)காலையில் தேவாலையம் சென்றிருந்ததாகவும் பின்னர் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய வேளை வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த நகைகள் கொள்ளையிடப் பட்டிருந்ததாகவும் இத்தனைக்கும் தாம் குடியிருப்பது பத்தாவது மாடியில் என்றும் தெரிவித்தார்.கொள்ளையர் தொடர்பான தகவல்கள் எதுவும்  இதுவரையில் தமக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.எசன் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.