பக்கங்கள்

23 ஜூன் 2013

துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து ரீ- 56 ரக துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணியளவில் ஓட்டமாவடி பாலத்தடியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பல்ஸர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனை செய்வதற்காக சைக்கிளை நிறுத்துமாறு கூறியபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற பொலிஸார் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து பிடித்து சோதனையிட்ட போது அறுகம்புல்லினால் மறைத்து வைத்து ரீ–56 ரக துப்பாக்கியை கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. பேத்தாளை பாடசாலை வீதியைச் சேர்ந்த தேவமணி பாக்கியம் என்பர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவருடன் வந்த சீலன் தப்பிச் சென்றுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.